பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Update: 2021-06-01 00:34 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த இளையராஜா(வயது 30), சமீர்(36), பைசல்(27), பிரகாஷ்(26), சங்கர்(28) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்