சாராய ஊறல் பறிமுதல்; 2 பேர் கைது

சாராய ஊறல் பறிமுதல்; 2 பேர் கைது

Update: 2021-06-01 00:34 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பேட்டலாடா கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 10 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக அரசு(வயது 42) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று அத்திக்கம்பை பகுதியில் சாராய ஊறல் வைத்திருந்த மணிகண்டன்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்