பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
கயத்தாறில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கயத்தாறு. ஜூன்:
கயத்தாறில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கீழ பஜார், புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிறுத்தம், சுங்கச்சாவடி , கயத்தாறு-மதுரை மெயின் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் வரும் நபர்களுக்கு கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிக்கண்ணன், பால், மாரியப்பன் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.