கொரோனா தொற்றுக்கு தம்பதி பலி

கொரோனா தொற்றுக்கு தம்பதி பலியானார்கள்.

Update: 2021-06-01 17:31 GMT
அறந்தாங்கி, ஜூன்.2-
அறந்தாங்கி தாந்தாணி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி சுஜாதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு பிரதீப் (14) என்ற மகனும், பிரீத்திகா (11) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் சுஜாதா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் வேலாயுதம் புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

மேலும் செய்திகள்