தடையை மீறிய 89 வாகனங்கள் பறிமுதல்; 76 பேருக்கு அபராதம்

தடையை மீறிய 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 76 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-01 21:25 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கையொட்டி 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாஸ்கரன் மேற்பார்வையில் இம்மாவட்டத்தில் போலீசார் 89 வழக்குகள் பதிவு செய்தனர். இதில் 87 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கார் என மொத்தம் 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த 73 பேர் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இருந்த 3 பேர் என மொத்தம் 76 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்