குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-01 21:25 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் முஸ்லிம்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டங்களை எதிர்த்து அவரவர் வீட்டில் போராட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர் அமின்சுல்தான் உள்பட பலர் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, அந்த சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்