சூதாடிய 5 பேர் கைது

சிவகாசி பகுதியில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-02 18:48 GMT
சிவகாசி, 
மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி நதிக்குடி பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்ட போது அங்குள்ள குவாரி அருகே சிலர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த கருப்பசாமி (வயது 42), முத்துமாரி (38), குமரவேல் (49), விஜயகுமார் (31), பொன்ராஜ் (37) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.400-யை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்