தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை

Update: 2021-06-02 18:49 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியை அடுத்த தாடகைமலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம்ஹாரபைரவர் கோவிலில் உள்ளது. 

இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் காலசம்ஹார பைரவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் அருள் பாலித்தார். 

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க இல்லை. கோவில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் செய்திகள்