மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2021-06-02 20:00 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் தனது உதவியாளருடன் தா.பழூர் அருகே உள்ள பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்களில் மணல் கடத்தி வந்த தாதம்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (வயது 40), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா (20), சீனிவாசபுரம் பழைய தெருவை சேர்ந்த கொளஞ்சி (30) ஆகிய 3 பேரை பிடித்து தா.பழூர் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மணல் கடத்திய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்