கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி

Update: 2021-06-03 17:21 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 21 ஆயிரத்து 904 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 142 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 142-ல் இருந்து 143-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 970 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 315 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 904-ல் இருந்து 22 ஆயிரத்து 219-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்