சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சாவு

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி கழுத்து இறுக்கி பரிதாபமாக இறந்தார்

Update: 2021-06-03 18:28 GMT
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர் முகமது இப்ராகீம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகளுடன் முஸ்லிம் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது 14 வயது மகள் பஸ்சானா, வீட்டின் அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடி விளையாடியுள்ளாள்.. அப்போது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தில் சுற்றி இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி மயங்கினாள். இதைதொடர்ந்து  மயங்கி விழுந்த அந்த சிறுமியை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிறுமி உடலை பரிசோதனை செய்துவிட்டு அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்