கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திருட்டு; 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-04 02:27 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தாமிர உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவில் இரும்பு வேலியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலம் தடா அடுத்த பெரியவேட்டை சேர்ந்த ஆனந்தன் (வயது 46), புதுகும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அஜித் (24) மற்றும் நங்கபள்ளம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்