கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 359 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 359 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-05 17:34 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், 85 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், 55 வயது ஆண், 51 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 34 ஆயிரத்து 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 444 பேர் நேற்று சிகிச்சையில் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 424 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 

மேலும் செய்திகள்