ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு

ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-07 00:08 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்