திருவள்ளூர் மாவட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து விவசாயி பரிதாபமாக பலியானார்.

Update: 2021-06-07 13:22 GMT
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தினகரன் (வயது 36). விவசாயியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், கடந்த 4-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட தினகரன் தனது நிலத்திற்குச் சென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்