திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-07 13:35 GMT
இந்த முகாமிற்கு தி.மு.க. பூண்டி ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி என்கின்ற அன்பரசு தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றியக் குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் அங்கிருந்த கொரோனா வைரஸ் தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை வழங்கினார்

அப்போது பூண்டி ஊராட்சி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் யஸ்வந்த் (வயது 12) என்ற சிறுவன் புதிய சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரனிடம் கொரோனா நிதியாக வழங்கினார்.

மேலும் செய்திகள்