மணல் அள்ளிய லாரி பறிமுதல்

மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-06-07 17:35 GMT
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள வைரவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம்(வயது 45). இவர் எஸ்.காவனூர் ஆற்றில் இருந்து லாரியில் மணல் அள்ளி கொண்டு வைரவனேந்தல் வழியாக வந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் அள்ளி வந்த லாரியை பிடித்து சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்