சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-06-07 21:05 GMT
மணப்பாறை
 மணப்பாறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் (வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேசவன் மற்றும் அவரது தந்தை பாலு என்ற பாப்பு (49), தாய் லெட்சுமி (43) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்