குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் தேங்காய், பழக்கடை வைத்துள்ளார்.
இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பியூலா (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது பியூலா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையினால் பியூலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பியூலாவின் தாய் வினோலியா அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்தார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.