கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

Update: 2021-06-08 18:16 GMT
சாயல்குடி
கடலாடி தாலுகா பகுதிக்கு உட்பட்ட சிக்கல் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல  உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்