சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது

இளையான்குடி அருேக சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-09 17:26 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே கலங்காதன்கோட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் சவடு மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் கல்லணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவரது டிராக்டரை பயன்படுத்தி அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்(45) என்பவர் சவடு மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மண் கடத்தி வந்த வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் கர்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்