முதியவர் திடீர் சாவு

முதியவர் திடீரென இறந்தார்.

Update: 2021-06-09 18:26 GMT
நொய்யல்
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் திடீரென்று மயக்கம் அடைந்து விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்னவே இறந்து தெரியவந்தது. இதுகுறித்து புன்செய்புகளூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயானந்தன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்