பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ராதாபுரம் அருகே பெண்ணிடம், மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.

Update: 2021-06-09 19:23 GMT
ராதாபுரம், ஜூன்:
ராதாபுரம் அருகே அழகனாபுரத்தை சேர்ந்தவர் வனராஜ் மனைவி சுமித்ரா சுதா (வயது 35). வனராஜ் இறந்துவிட்டதால் சுமித்ரா சுதா தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கினார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சுமித்ரா சுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை நைசாக பறித்துச் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்