மண் அள்ளி வந்த வாலிபர் கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி மண் அள்ளி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-09 19:31 GMT
சிவகாசி, 
சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் திருத்தங்கல்-சுக்கிரவார்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி மண் (கிராவல்) கொண்டு வந்ததற்கான அனுமதி சீட்டை கேட்டனர். வாகனத்தில் இருந்த சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது23) என்பவர் அனுமதி சீட்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதை தெடர்ந்து அவரை வருவாய்த்துறையினர் திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் டிராக்டரை மண்ணுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்