மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகையை மர்மநபர் ஒருவர் பறித்து சென்றார்.

Update: 2021-06-09 19:31 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குல தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 65).  இவர் நேற்று காலை பால் வாங்கிவிட்டு வாழைக்குழ தெரு தீர்த்தவாரி மண்டபம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து வந்த முக கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் வினோதாவிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்