விதிகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம்

அருப்புக்கோட்டையில் விதிகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-09 19:33 GMT
அருப்புக்கோட்டை, 
முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட சில கடைகளை விதிமுறைகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நகரில் விதிமுறைகளை மீறி பேன்சி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் மேற்கொண்ட உணவகங்கள், பல சரக்கு கடைகள் உள்பட 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதத்தை தாசில்தார் விதித்தார். 

மேலும் செய்திகள்