பாக்கெட் சாராயம் விற்றவர் கைது

பாக்கெட் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-06-09 21:42 GMT
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் பாக்கெட் சாராயம் விற்கப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது மங்களமேடு கிராமத்தில் பாக்கெட் சாராயம் விற்று கொண்டிருந்த பரமசிவம் மகன் சின்னசாமி (வயது 30) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து சுமார் 25 லிட்டர் அளவுள்ள 44 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பகுதியில் வேறு யாரேனும் சாராயம் விற்றால் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் 94981 00690 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.


மேலும் செய்திகள்