கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் பலி

கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் பலியாகினர்.

Update: 2021-06-10 15:32 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு பெண் உள்பட 7 பேர் பலியானார்கள்.புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 439 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 230 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 15 ஆயிரத்து 724 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 421 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 294 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்