கொரோனாவுக்கு 6 பேர் சாவு

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-10 15:58 GMT
தேனி : 

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 800-க்கும் மேல் இருந்தது. 

இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 11 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 755 பேர் நேற்று குணமாகினர். தற்போது 2 ஆயிரத்து 986 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்த போதிலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற தேவாரத்தை சேர்ந்த 67 வயது முதியவர், ஓடைப்பட்டியை சேர்ந்த 56 வயது ஆண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 54 வயது பெண், மதுரையை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 

அதுபோல், கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற தேனி பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், 70 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்