மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2021-06-10 19:16 GMT
கோவை

மதுக்கரை தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் அஜிபா உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

வெள்ளலூர்-சிங்காநல்லூர் ரோட்டில் எல்லை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் அந்த லாரியில் 3 யூனிட் மணல் இருந்தது. 

இது தொடர்பாக தாசில்தார் நாகராஜன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட செட்டிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது23) என்பவரை கைது செய்ததுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்