மணமேல்குடி அருகே சாராயம் விற்றவர் கைது

மணமேல்குடி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-06-10 19:49 GMT
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த அத்தாணி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் அத்தாணி பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த செல்லப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த வேம்பையன் மகன் வீரையா என்பவரை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் 2 குடங்களில் வைக்கப்பட்டிருந்த 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்