மர நாய் பிடிபட்டது

கடையம் அருகே மர நாய் பிடிபட்டது

Update: 2021-06-10 19:53 GMT
கடையம்:
கடையம் அருகே கட்டேறிப்பட்டி துணை மின்நிலையத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தில் நேற்று மதியம் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, மரநாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதை ராமநதி அணை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

மேலும் செய்திகள்