புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர்

Update: 2021-06-10 20:12 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 300 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 2,034 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்