வாலிபரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

வாலிபரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர

Update: 2021-06-10 20:17 GMT
காரையூர்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வினோத் (வயது 24). இவர் கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் காலில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த வினோத்தை, அவரது சகோதரர் சூர்யா மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில், முன் விரோதம் காரணமாக வினோத்தை வெட்டிய இலுப்பூர் தாலுகா வயலோகத்தை சேர்ந்த ராம்(23), சுரேந்திரன் (29) மற்றும் புதுக்கோட்டை அருகே உள்ள குன்னவயல் வெள்ளைச்சாமி (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்