ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது

ஓடை மண் அள்ளிச்சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-10 20:28 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு நெட்டலக்குறிச்சி கிராமம் அருகே டிராக்டரில் ஓடை மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது நெட்டலக்குறிச்சி பெரிய ஏரி ஓடை அருகே ஓடை மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை நிறுத்தி, அதில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், நெட்டலக்குறிச்சி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த பாரதி (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் ஏற்றிச்சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து, பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்