கொரோனாவுக்கு முதியவர் பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-10 20:28 GMT
அரியலூர்:

முதியவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,324 ஆக உயர்ந்துள்ளது. இதில் 157 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
1,444 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 11,722 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,444 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்