ஆடு திருடிய வாலிபர் கைது

அருப்புக்கோட்டையில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2021-06-10 20:46 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 46). இவருடைய 15 ஆட்டுக்குட்டிகளை மர்மநபர்கள் திருடி ெசன்றதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்போது பாலவனத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழுக்கலொட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (28) என்பதும், அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் மகன் சதீஷ்குமார் (27) என்பவருடன் சேர்ந்து ஆட்டுக்குட்டிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தங்கமணியை கைது செய்த போலீசார் அவர் வீட்டில் இருந்த 13 ஆட்டுக்குட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்