100 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளம் பகுதியில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோடு அருகில் கொரோனா பரிசோதனை முகாம் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் சபரி, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர் வாசுகி ஆகியோர் கொண்ட குழு ஆலங்குளம் பகுதியில் உள்ள 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.