அதிக தூக்க மாத்திரை தின்ற பெண் சாவு

தேனி அருகே அதிக தூக்க மாத்திரை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-11 16:13 GMT
தேனி: 

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த மாணிக்கவாசகன் மனைவி சாந்தி (வயது 58). சம்பவத்தன்று இரவில் இவர் தூக்கம் வரவில்லை என்பதற்காக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. 

இதில் வீட்டில் மயங்கி விழுந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அவருடைய மகன் கோகுல் (38) பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்