தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகினர்.

Update: 2021-06-11 16:29 GMT
தேனி : 

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 258 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

நேற்று மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 323 ஆக உயர்ந்தது.

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 524 பேர் நேற்று குணமாகினர். தற்போது 2 ஆயிரத்து 661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கொரோனா பரவல் குறைந்த போதிலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற கம்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர், 60 வயது மூதாட்டி, 63 வயது முதியவர், 62 வயது முதியவர், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 40 வயது ஆண், தேனியை சேர்ந்த 38 வயது ஆண், கோடாங்கிபட்டியை சேர்ந்த 32 வயது ஆண் ஆகிய 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்