கொரோனாவுக்கு 3 பேர் பலி-251 பேருக்கு தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

Update: 2021-06-11 17:23 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,653 பேர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 329 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,572 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 164 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,966 ஆகும்.

மேலும் செய்திகள்