ஆவூர், ஜூன்.12-
திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருமாணிக்கம். இவரது மகன் ரத்தினவேல் (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே வடுகபட்டியில் பாட்டி வீட்டில் தங்கியிருந்த செம்பட்டு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தங்கி இருந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரத்தினவேலை கைது செய்து, மாணவியை மீட்டனர். ேமலும் சிறுமியை கடத்தி திருமணம் செய்த ரத்தினவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருமாணிக்கம். இவரது மகன் ரத்தினவேல் (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே வடுகபட்டியில் பாட்டி வீட்டில் தங்கியிருந்த செம்பட்டு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தங்கி இருந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரத்தினவேலை கைது செய்து, மாணவியை மீட்டனர். ேமலும் சிறுமியை கடத்தி திருமணம் செய்த ரத்தினவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.