பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 4 கடைகளுக்கு சீல்

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 4 கடைகளுக்கு சீல்

Update: 2021-06-11 18:27 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பேட்டரி, பூட்டு சாவி சர்வீஸ் மற்றும் 2 ஸ்டேஷனரி கடைகள் செயல்பட்டு வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கும், பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் உத்தரவுப்படி பரமத்திவேலூர்‌ போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் வேலூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோார் அடங்கிய அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி பரமத்திவேலூர் திருவள்ளூர் சாலையில் செயல்பட்ட 2 ஸ்டேஷனரி கடைகள், பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பேட்டரி கடை மற்றும் அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பூட்டு சாவி சர்வீஸ் கடை ஆகிய 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்