தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஏர்வாடி அருகே தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-11 19:56 GMT
ஏர்வாடி:
திருக்குறுங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் அழகியநம்பி (வயது 60). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாகராஜன் சென்னையில் தங்கியிருந்து தச்சு தொழில் செய்து வருகிறார். இதனால் அழகியநம்பி மட்டும் திருக்குறுங்குடியில் தனியாக வசித்து வந்தார். அவரை பராமரிப்பதற்கும் ஆட்கள் இல்லை. இதனால் அவர் மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அழகியநம்பி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்