ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-11 19:59 GMT
விருதுநகர்,
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர். அதேபோல ஆலங்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கொங்கன்குளம் பால கிருஷ்ணன், வெம்பகோட்டை மேற்கு வட்டார தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ெரங்கசாமி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பட்சி ராஜா வன்னிய ராஜ், மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி மெடிக்கல் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
சாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர துணைத்தலைவர் சேது ராமலிங்கம், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரசன் கார்த்திக்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்