கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-11 20:03 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாபநாசம் ரோடு டாணாவில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விக்கிரமசிங்கபுரம் வடக்குத்தெரு மேட்டு தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 39), சிவனுபாண்டியன் மகன் ரகுபதிபாண்டியன் (23), விக்கிரமசிங்கபுரம் ஜார்ஜ்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகர் (41) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்