தென்காசியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

Update: 2021-06-11 20:18 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயது, 68 வயது பெண்கள் மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். மேலும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த 60 வயது, 63 வயது முதியவர்களும் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை கொரோனாவுக்கு 419 பேர் பலியாகி உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 994 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 388 பேர் குணமடைந்தனர். 1,758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்