கொரோனாவுக்கு 6 பேர் பலி

கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர

Update: 2021-06-11 20:35 GMT
கரூர்
 கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அந்தவகையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 395 பேர் குணமடைந்ததால் நேற்று அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் 6 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி கொரோனாவுக்கு 2,274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்