குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூரில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-06-12 03:44 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கி, விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதனை பின் தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல், மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மேலாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்