புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று

Update: 2021-06-12 16:50 GMT
புதுக்கோட்டை, ஜூன்.13-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து505 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் நேற்று ஒரே நாளில் 369 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து572 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 1,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு நேற்று 2 பேர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்